பார்த்தீனியம் பார்சீனியம்



பார்த்தீனியம்



இவற்றால் நன்மைகளை விட தீமையே அதிகம். காரணம். அந்நிய நாட்டில் எந்தவொரு தாவரமும் களைதான். உதாரணம் ஆசுதிரேலியாவில் 70% அதிகமாக அந்நிய செடிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதைத் தடுக்க அந்நாடு வெளிநாடுகளிலிருந்து செடிகளை இறக்குவதில் தடை விதித்துள்ளது. அதேபோல் இத்தாவரமும் நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. இவை தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் பரந்து கிடக்கின்றன. இவை வெளியிடும் மகரந்தம் மற்றும் வித்துக்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறுகளையும், ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துகின்றன. இவற்றின் மீது எமது உடல் படும் போது ஒருவிதமான அரிப்பு காணப்படும். இவற்றை உண்ணும் பசுக்களின் பால் ஒரு வித கசப்புத்தன்மையையும், சிறிதளவான அதாவது மறைமுகமான நச்சுத்தன்மையையும் கொண்டிருக்கும்.


இச்செடியை அழிப்பது கட்டாயமாகும். ஏனெனில் இவை விளைநிலங்களையும் வளிமண்டலத்தையும் பெரிதும் மாசுபடுத்துகின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வினமே அழிவதற்கு பெருங்காரணமாய்த் திகழ்கின்றன. இவைகளை அழிக்கச் செடிகளைப் பிடுங்கிப் பள்ளத்தில் இட்டு உப்புக்கரைசல் அல்லது காமாக்சின் (எறும்பு மருந்தாகவும் பயன்படுகிறது) என்னும் வேதிப்பொருளை இட்டு குழிகளை மூடுவதன் மூலம் இக்களைகளை நாமழிக்கமுடியும்.
ஒரேயடியாக அழிப்பதென்பது சாத்தியமில்லாததொன்று ஆகையால் இவைகளை தழைச்சத்தாக பயிர்களுக்கு இடுவதன் மூலமும் இவைகளைக் கட்டுப்படுத்தமுடியும்.இக்களைகளை அகற்றுவதற்கு இவற்றை எரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
பார்த்தீனியத்தின் பூர்வீக நாடு அமெரிக்கா ஆகும். அக்காலங்களில் அமெரிக்கா இந்தியாவுக்கு கோதுமை மா போன்ற உணவுப்பொருட்களை இறக்குமதி செய்தது. அதன்போது அவை கோதுமை மாக்களுடன் கலக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தடைந்தது என நம்பப்படுகின்றது.



பாவாடை தாவணி

பாவாடை தாவணி

SUDHARSAN

பருவமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை ஏன் அணியவேண்டும்.
 பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்கு,,

பாவாடை தாவணி அணிந்த பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்தனை விதமோ . ... கூடவே அத்தனை  விதமான  நோய்களும். வருகிறது.

அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன 
பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.
ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.
கம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை.

மேலைநாடுகளில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும்.
 அங்கிருப்பவர்கள் இறுக்கமாக உடையணிந்தால்  தான் , அவர்களின்  உடல் வெப்பத்தை பாதுகாக்க முடியும். அது நாகரீகம் அல்ல.  மேற்கத்திய நாடுகளின் சூழலுக்கு ஒத்த கலச்சாரம்
.
வெப்பமண்டல பகுதியில் வாழும் நாம் மேற்கத்திய கலாச்சார உடைகளை நாகரீகம் கருதி  அணிகிறோம் .
விளைவு ,

பெண்களுக்கு
 முறையற்ற மாதவிடாய், வெள்ளைபடுதல், கர்பப்பை செயலிழப்பு, கருகலையுதல், அலர்ஜி, குடற்புழுக்கள் வேகமாக வளாருதல், அந்தரங்கப் பகுதியில் துர்நாற்றம், கர்பப்பை புற்றுநோய், இன்னும் பல.....

ஆண்களுக்கு
விந்து நீர்த்து போதல், விந்தணுக்கள் குறைபாடு, நரம்பு தளர்ச்சி, சிறுநீரகக் கோளறு, சோர்வு, பலகீனம், இன்னும் பல.........

ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும்.
இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதிகளே...

தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

வெப்பமண்டல பகுதியில் வாழ்பவர்கள் தவிர்க்க வேண்டிய உடைகள்,
ஜீன்ஸ், கொட்ஷூட், இறுக்கமான சட்டை,, இறுக்கமான சுடிதார்,  ஷூ காலணிகள், நைலான் புடவைகள், கழுத்தில் கட்டும் டை, லைக்ரா இலைகளால் ஆன  உடைகள், 

சீமை கருவேலம் மரம்

சீமை கருவேலம் மரம்



நமது நாட்டின் வளமான பகுதிகளை சீரழித்த,  சீரழித்து கொண்டிருக்கிற 
மரம் இந்த சீமை கருவேலம் மரம். இது ஒரு நச்சு மரம்.  அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களால் ஆபத்தான தாவரம் என்று அறிவித்து தடை செய்துள்ளனர். மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட, இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த சீமை கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி 


சீமை கருவேலம் மரத்தின் தீமைகள்

  • இது நிலத்தடி நீரை வற்றி போகச்செய்துவிடுகின்றன மற்றும் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது

  • இது  கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.

  • இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் உயிர் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளரவிடாது

  • ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி 

  • விடுகிறது. மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.

  • இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் கால்நடை, மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்

  • இந்த நச்சு மரத்திலிருந்து வெளிவரும் வெப்பம் உயிரினங்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது

  • இவை கிராம மக்களுக்கு விறகாக, கரியாக பயன் பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு உதவுவதால் இன்னும் அப்படியே வளர்கிறது.

  •  இந்த முள் மர விதைகள் எத்தகைய பூச்சிகளுக்கும் இரையாகாமல், 10 ஆண்டு காலத்திற்கு பின்னும் முளைக்கும் வீரியம் கொண்டவை.  எத்தகைய வறண்ட நிலப்பரப்பிலும் 12 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையுடையது. இம்மர சல்லி வேர்கள் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் மேலேயே தேங்க வைத்து விடுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி, வேளாண்மை தொழிலுக்கு தீமை விளைவிக்கும்

  • இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.

  • இம்மரங்களில் பறவைகள் அமர்வதில்லை. கூர்மை மிக்க அடர்த்தியான முட்கள் இருப்பதால், எந்த பறவைகளாலும் இம்மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்ய முடிவதில்லை.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது.  அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா? நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது. 
விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன. ஆறு, ஏறி, கண்மாய் , குளம் என்று நீர் நிலைகளில் பரவி வந்த சீமைக் கருவேலமரம் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது. எண்ணிக்கையில் குறைந்த அளவே இருந்த காலத்தில் அடுப்பெரிக்கவும், விவசாய பகுதிகளைக் பாதுக்காக்கும் வேலியாகவும் பயன்பட்டு வந்த இந்த மரங்கள் நாளடைவில் கட்டுப்பாடற்று விதை பரவி விவசாய நிலங்களிலும் வளர ஆரம்பித்து விட்டது. நீரின்மையால் விவசாயத்தில் சரிவர ஈடுபட முடியாமல் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு தானாக வளரும் இந்த சீமை கருவேலமரங்கள் வாழ்வதற்கு தேவையான வருமானத்தை வழங்கியதால் அனைத்து பகுதியிலும் இந்த மரங்கள் பெருகிவளர வாய்ப்பாக அமைந்தது. நீர் பற்றாக்குறையால் விவசாயத்தை இழந்த மக்களுக்கு நிலத்தடியில் நீரில்லாமலும் , மேகம் கூடியும் மழை பொழியாமலும் போவதற்கு காரணமே இந்த சீமைக் கருவேலமரம்தான் என்ற உண்மை 40 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மக்களுக்கு விளங்கிவருகிறது

நான் யார் தெரியுமா ?!?!?!





மனதை கொன்று  தன்னை
மனிதன் என்று கூறும் மிருகம்.

கனவை தொலைத்து கடவுளை 
தேடும் கயவன்.

மோஹத்தில் வீழ்ந்து மூதாரை மதிக்காத முட்டாள் .

சல்லாபம் ஒன்றே சகலமும் என நம்பும் சாத்தான் .

சுயத்தை இழந்து சுகத்தை தேடும் சோம்பேரி.

இயல்பை மறந்து இன்பத்தை தேடும் ஏமாளி .

பாசத்தை தொழைத்து பணத்தைத்
தேடும் பரதேசி. 

உதவத்தெரியாத உழைப்பாளி
உலகம் அறியாத கோமாலி.

எனக்கென்ன தகுதி இருக்கிறது உன்னையும் இவ்வுலகையும் விமர்சிக்க ?!?!?!
























மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ?


மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ?
யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள்.
இல்லை...! அவர் ஒரு தமிழர். அதுவும் தனது 14வயதில் கண்டுபிடித்து சாதனை செய்த சிவா அய்யாதுரை.
ஒரு வீடியோ, போட்டோ, கடிதமாகவோ இருக்கட்டும் உடனே ஒருவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் (Email) லில் அனுப்பினால் அனுப்பிய மறு நிமிடம் அவருக்கு கிடைத்துவிடும்.
மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே (Email) இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரில் வசித்துவருபவர்.
அவருடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி, அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர்.
பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்து,
1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள “யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி’யில்
கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தார் அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர் மயமாக்க முடியுமா? என்று அவர்கள் கேட்ட போது இவருக்கு 14 வயது.
தொடர்ந்து பலநாட்கள் கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினார். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தார்.
இந்த E MAIL-ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.
இவர்தான் FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவர், இது DATABASE, LAN உடன் தொடர்புடையதாக இருந்தது.
இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் இவர் உருவாக்கியவை.
அதற்குப் பிறகு “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றார்,
மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் இவரும் ஒருவர்.
1982 ஆகஸ்ட் 30 இல் இ-மெயிலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமை பெற்றார். 

சூரியன் SUN


சூரியன் SUN



சூரியன் sun



இது பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும்.இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும் பலூனில் அடைக்கப்பட்டிருக்கும் ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும்,அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது.
சூரியனில் இருந்து பெறப்படும் ஒளிச்சக்தி தாவரங்களின் வளர்ச்சியில் பங்களிக்கிறது. நாம் தாவரங்களில் இருந்து உணவை பெற்றுக் கொள்கிறோம். நாம் தாவரங்களின் மற்றைய பாகங்களை சமையலில் எரிப்பதற்குப் பயன்படுத்துகிறோம். ஆகவே எமது அன்றாட வாழ்க்கைக்கு சூரியன் மிக அவசியமாகும்

சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது


சூரியனின் எல்லா பகுதிகளும் ஒரே வெப்பநிலையில் இல்லாமல் சில பகுதிகள் சற்றுகுளிர்ச்சியாக உள்ளதால் அப்பகுதிகள் இருளாக காட்சி அளிக்கின்றன. இதனால் சூரியனில் புள்ளிகள் போன்ற தோற்றம் உருவாகிறது இதை நாம் "சூரிய புள்ளிகள்" என அழைக்கிறோம்.

சூரிய குடும்பம் (Solar System)






Solar System





சூரிய குடும்பம் (Solar System


சூரிய அமைப்பு (Solar System) அல்லது சூரியக் குடும்பம் என்பது சூரிய னுக்கும்அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும். இந்த அமைப்பில் சூரியனை நேரடியாக சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும், சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு சூரிய அமைப்பு பொருட்கள் போன்றவையும், சூரியனை மறைமுகமாக சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.

4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மூலக்கூறு ஏற்பட்ட ஈர்ப்புவிசை சுருக்கம் காரணமாக சூரிய அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் எடையில் பெரும்பகுதியை சூரியனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக அதிக எடை கொண்டது வியாழன் கோளாகும். புதன்வெள்ளிபுமீ மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட்கோள்கள், புவியொத்த கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை. பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப பெருங்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital path) கதிரவனைச் சுற்றிவருகின்றன.

சூரிய அமைப்பு சிறு பொருட்களையும் கொண்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ள சிறுகோள் பட்டை  (Asteroid belt) அகக்கோள்களைப் போல் உலோகங்கள் மற்ரும் தனிமங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது, இதில் குறுங்கோள் அமைந்துள்ளது. பனிக்கட்டிகளால் உருவான கைப்பர் பட்டை (Kuiper belt நெப்டியூனின் வட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதில் புளுட்டோஅவுமியா,  (Haumea) மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகிய குறுங்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளைத் தவிர, பல்வேறு சிறு சிறு பொருட்களும் தடையின்றிப் பயணித்து வருகின்றன. ஆறு கோள்களையும், குறைந்தபட்சம் நான்கு குறுங்கோள்களையும் பல சிறு பொருட்களையும் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நிலவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. புறக்கோள்கள் ஒவ்வொன்றையும் தூசு மற்றும் சிறு பொருட்களால் ஆன ஒரு கோள் வளையம் சுற்றியுள்ளது.

கதிரவ அமைப்பு பால்வெளி மணடலத்தில் மையத்தில் இருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஓரியன் கையில் (spiralarm)  அமைந்துள்ளது.





mercury planet புதன் கிரகாம்